News February 1, 2025
நாளை பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்

தமிழ்நாடு முழுவதும் நாளை (பிப்.2) பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என பத்திரப்பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் நாளை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள மக்கள் விரும்புவதால் அலுவலகங்கள் இயங்கும் எனவும் ஆவணப் பதிவுக்கு, விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
மதுரை: சுகாதார துறையில் வேலை ரூ40,000 சம்பளம் APPLY

மதுரை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் IT Coordinator, Lab Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் 22-08-2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதிகேற்ப ரூ.12,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.டிப்ளமோ முதல் டிகிரி M.Sc, MCA, படித்தவர்கள் விண்ணப்ப படிவத்தை <
News August 14, 2025
மதுரையில் அரசு சான்றிதழுடன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

மதுரை புதுார் தொழிற்பேட்டையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் ஆக. 16, 17ல் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பயிற்சி, ஆக. 23, 24ல் டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஜி.எஸ்.டி., பிராக்டிஷனர் பயிற்சிகள் நடக்கிறது. 10ம் வகுப்பு படித்த, 18 வயது நிரம்பிய இருபாலர்கள் சேரலாம். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அறிய 8695646417 அழைக்கலாம். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க .
News August 13, 2025
மதுரை: தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒரு தமிழ் ஆர்வலருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், www.tamilvalarchithurai.tn.gov.in ஆகியவற்றில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.