News December 28, 2025

நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

image

தமிழகத்தில் நாளை(டிச.29) உறைபனி ஏற்பட வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், காலை 6 முதல் 8 மணி வரை வாகனங்களில் வெளியே செல்வதை தவிருங்கள். உங்கள் ஊரில் பனியின் தாக்கம் எப்படி இருக்கிறது?

Similar News

News December 29, 2025

ரேபிட் செஸ்: இந்தியாவுக்கு 2 வெண்கலம்

image

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 2 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் பிரிவில் 13 சுற்றுகள் முடிவில், 4 வீரர்கள் தலா 9.5 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்தனர். இதையடுத்து டை பிரேக்கரில் அர்ஜுன் எரிகைசி 3-ம் இடம் பெற்று வெண்கலம் வென்றார். மகளிர் பிரிவில் 11 சுற்றுகள் முடிவில், கோனெரு ஹம்பி வெண்கல பதக்கத்தை வசப்படுத்தினார். மேக்னஸ் கார்ல்சன் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

News December 29, 2025

ரஷ்யா, உக்ரைன் போர்.. டிரம்ப் முக்கிய தகவல்

image

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையால் போர் முடிவுக்கு வரலாம் அல்லது நீண்ட காலம் எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், போரினால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடுவதை யாரும் விரும்பவில்லை எனவும் அவர் பேசியுள்ளார். இந்த போரை நிறுத்துவது மிகவும் சிரமமானது என டிரம்ப் குறிப்பிட்டார்.

News December 29, 2025

ஓஷோவின் பொன்மொழிகள்!

image

*உன்னை நேசித்தால் நீ பிறரை நேசிப்பாய், உன்னை வெறுத்தால் நீ பிறரையும் வெறுப்பாய் *எங்கேயும், எப்போதும், எப்படி இருந்தாலும், எதுவாக இருந்தாலும் ஆனந்தமாய் இருந்திடுங்கள் *பேசும்போது பயப்படாதீர்கள்! பயப்படும்போது பேசாதீர்கள்! *வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை. வேலையை விரும்பிச் செய்பவன் அரசன் *இறைவன் வேண்டுவதைத் தருபவர் அல்ல, வாழ்க்கைக்குத் தேவையானதைத் தருபவர் *நட்சத்திரங்களை காண இருள் தேவைப்படுகிறது

error: Content is protected !!