News January 22, 2025
நாளை காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அசாம் மாநிலம் குவஹாட்டியில் பான்பஜார் காவல் நிலையத்தில் ராகுல்காந்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கருத்து சுதந்திரத்தை பறிக்கின்ற வகையில் தொடர்ந்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கின்ற பாரதிய ஜனதா அரசை கண்டித்து நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் பகண்டை கூட்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் அறிவித்துள்ளார்.
Similar News
News September 12, 2025
தலைமை காவலர் ஆயுதபடைக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்த செல்வகுமார் வாணியங்குப்பம் கெடிலம் ஆற்றில் நடந்த மணல் கடத்தலை தடுக்க தவறியது விசாரணையில் தெரியவந்தது. மணல் கடத்தலுக்கு அவர் உடந்தையாக இருந்தது குறித்து எஸ்.பி.மாதவன் நடத்திய விசாரணையில் இது உறுதியானது. இதனை அடுத்து செல்வகுமாரை இன்று ஆயுதப்படைக்கும் மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
News September 12, 2025
இரவு நேர ரோந்து பணி- மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்.,12) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
கள்ளகுறிச்சி: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும்.பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் 5 சதவீதம் செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <