News April 24, 2024
நாளை கள்ளழகர் திருவிழா – ஐகோர்ட் அதிரடி உத்தரவு

“மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடு திருப்தி அளிக்கிறது. விஐபிக்களுக்கு வழங்கப்பட்ட 2400 பாஸில், ஒரு பாஸ்க்கு ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கூடுதலாக யாரையும் அனுமதிக்க கூடாது. பாரம்பரிய முறையில் தோல் அல்லது கை பம்புகள் மூலம் மட்டுமே தண்ணீர் தெளிக்க வேண்டும், மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் ” என மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

மதுரை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News January 2, 2026
மதுரை: கால்வாயில் குளித்தவர் பரிதாப பலி

திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(57). திருமணம் ஆகாதவர். நேற்று அப்பன் திருப்பதி அருகே கள்ளந்திரி பெரியாற்று கால்வாயில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி கால்வாயில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இவரது சகோதரி கீதா அளித்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
மதுரை மக்களே அரசு பஸ்ஸில் பிரச்னையா.!

மதுரை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/ குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99020 இந்த எண்ணல் புகார் தெரிவிக்கலாம். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க


