News March 11, 2025

நாளை கடைசி நாள்!

image

திருப்பூர் இளைஞர்களுக்கு வேலை திறன்களை வளர்த்துகொள்ள PM Internship Scheme திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிற்பயிற்சி, மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். இதில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் முதல் டிகிரி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. இதை ஷேர் செய்யவும்.

Similar News

News March 11, 2025

இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகள் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 11.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் பொதுமக்களுக்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 11, 2025

லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

image

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதிக்குட்பட்ட இடையம்பாளையம் பகுதியில் சிட்டாவில் பெயர் சேர்க்க 7000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் இன்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இடையம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் உதவியாளர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News March 11, 2025

திருப்பூரில் தபால் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருப்பூர் தலைமை தபால் நிலையம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு தபால் துறை வழங்கும் சேவைகளை பற்றி விவாதிக்க, குறைகள் இருந்தால் தெரிவிக்க, தபால் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. தபால்துறை சார்ந்த யோசனை, புகார்கள் இருப்பின் வரும் 14ம் தேதிக்குள், ‘பட்டாபிராமன், தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் 641601’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!