News August 3, 2024
நாளுக்கு நாள் உயரும் பூக்களின் விலை

ஆடி மாதத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பூ சந்தையில் நேற்றைவிட பூக்களின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. ரோஜா பூ ரூ.150, செண்டுமல்லி ரூ.80, சாமந்தி பூ ரூ.200, சம்பங்கி பூ ரூ.140, கனகாம்பரம் ரூ.800, மல்லி ரூ.400, அரளி பூ ரூ.50க்கு விற்பனையாகிறது. மழை காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது. நேற்றைவிட ஒவ்வொரு பூக்களின் விலையும் சுமார் ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
Similar News
News September 17, 2025
சென்னையில் 21ம்தேதி போக்குவரத்து மாற்றம்

Cyclothon சென்னை 2025’ நிகழ்ச்சியை ஒட்டி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும் 21ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் காலை 8.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி செல்லும் வாகனம் கே.கே.சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்பு, ஒ.எம்.ஆர் சாலை படூர் வழியாக மாமல்லபுரம் தங்கள் இலக்கை அடையளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News September 17, 2025
சங்கர் கணேசுக்கு திடீர் மூச்சுத் திணறல்

இசையமைப்பாளரும் நடிகருமான சங்கர் கணேஷ் மூச்சு திணறல் காரணமாக சென்னை போரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு நுரையீரலில் நீர் கோர்த்து உள்ளது கண்டு
பிடிக்கப்பட்டது.
News September 17, 2025
சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை விட்டுவிட்டு லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.