News February 24, 2026
நாய்க்கடி.. அச்சத்தில் தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலத்தில் வங்கி ஊழியர் ஒருவர் தெருநாய் கடித்ததால் பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். 30 வயதான இந்த நபரை சில நாட்களுக்கு முன் தெருநாய் கடித்துள்ளது. அவர், ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், அவரது நடத்தையில் அசாதாரண மாற்றங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும், தற்கொலை கடிதத்தில் ரேபிஸ் நோய் அச்சமே முடிவிற்கான காரணம் என எழுதியுள்ளார்.
Similar News
News February 26, 2026
விஜய் – ரஷ்மிகா திருமண விருந்தில் பன்றி கறி!

<<19242357>>விஜய் – ரஷ்மிகா<<>> திருமண விருந்தின் மெனு வெளிவந்துள்ளது. தெலுங்கானா ஸ்டைல் மட்டன் பிரியாணி, ஹைதராபாத் தம் பிரியாணி, நாட்டுக்கோழி குழம்பு, புளி ரசம் ஆகியவை பரிமாறப்பட்டுள்ளன. மேலும், கர்நாடகா பிசிபேலே பாத், பன்றி கறி, மைசூர் பாக் விருந்தினர்களால் சுடச்சுட ருசிக்கப்பட்டதாம். ‘குடகு’ பாரம்பரியத்தில் பன்றிக் கறி உட்கொள்வது வழக்கம் என்றும், அது தனக்கு பிடிக்கும் என ரஷ்மிகா முன்னர் கூறியுள்ளார்.
News February 26, 2026
புதிய ரேஷன் கார்டுகள்.. அமைச்சர் கொடுத்த அப்டேட்!

TN-ல் 2021 முதல் தற்போது வரை 21 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல், கள்ளிமந்தையத்தில் பேசிய அவர், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். முன்னதாக, 2025 டிசம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு Smart Card வழங்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
News February 26, 2026
2026 தேர்தலில் இருந்து துரைமுருகன் விலகலா?

வயதுமூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் (87) சமீபத்தில் நடைபெற்ற பேரவை கூட்டத்தொடரில்கூட பங்கேற்கவில்லை. இந்நிலையில், அவர் 2026 தேர்தலில் போட்டியிடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரது மகனும் MP-யாக இருப்பதால், புதிதாக இளைஞர்களுக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. விலகல் முடிவை துரைமுருகன் எடுத்தால், அது சரியானதா? உங்கள் கருத்து என்ன?


