News January 1, 2026
நாய்களின் கூடாரமாகிறதா சேலம்? மாநில அளவில் 2-ம் இடம்

சேலம் மாவட்டத்தில் கடந்த தகவலின்படி, ஜனவரி முதல் டிசம்பர் வரை 41,837 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக அளவில் நாய்க்கடி பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News January 10, 2026
சேலம்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 10, 2026
சேலம் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News January 10, 2026
சேலம்: வயதுக்கு மீறிய நபருடன் காதல்..தந்தை விபரீத முடிவு!

சேலம் சித்தர்கோயில் அருகே உள்ள மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த திருநெல்வேலியை சேர்ந்த வர்ஷினி (22). இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான சக்திவேல்(40) என்பவரைக் காதலித்ததால், அவரது தந்தை வரதராஜன் ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்துள்ளார்.இந்தநிலையில் தந்தை வரதராஜனை பிடிக்க சேலம் போலீஸ் கமிஷனர் 4 தனிப்படை அமைத்துள்ளார்.


