News August 11, 2025
நாமக்கல்: 8வது போதும்.. ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

நாமக்கல் மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT!
Similar News
News August 11, 2025
திருமணத் தடை நீக்கும் எயிலிநாதர் கோயில்!

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு கிராமத்தில் எயிலிநாதர் கோயில் அமைந்துள்ள. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. இங்கு திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். SHARE பண்ணுங்க!
News August 11, 2025
நாமக்கல்லில் (ஆக.15) மதுக்கடைகளை மூட உத்தரவு!

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 15.08.2025 அன்று சுதந்திர தின விழாவையொட்டி, அனைத்து இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக்), மதுக் கூடங்கள், மற்றும் FL 1, FL 2, FL 3, FL 3A, FL 3AA, FL 11 வரையிலான உரிமம் பெற்ற வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி அறிவித்துள்ளார்.
News August 11, 2025
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.