News April 4, 2024

நாமக்கல்: 200 முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்து 200 முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஷ்கண்ணன் தெரிவித்தாா். நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 1,628 வாக்குச்சாவடிகளில் தோ்தல் பணிகளை மேற்கொள்ள கா்நாடக மாநில காவல் துறையினா், துணை ராணுவத்தினா் 190 போ் வந்துள்ளனா்.

Similar News

News February 12, 2026

நாமக்கல்: ஆதார் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<> Aadhaar App<<>> மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் பயனடையும் வகையில் இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 12, 2026

மல்லசமுத்திரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே தீ விபத்து!

image

மல்லசமுத்திரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே காலிநிலத்தில் இன்று (பிப்.11) மதியம் 2 மணியளவில், மர்ம நபர்கள் புகை பிடித்துவிட்டு புகைதுண்டை கீழே போட்டதில் இலைசருகுகள் மீது விழுந்து திடீரென தீபற்றியது. தகவலறிந்து வந்த ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்மணி மற்றும் சிறப்புநிலை அலுவலர் தண்டபாணி ஆகியோர் தீயை அனைத்தனர். இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

News February 12, 2026

நாமக்கல் இளைஞர்களே பிப்.14 அரிய வாய்ப்பு!

image

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் பிப்ரவரி 14 (சனிக்கிழமை) அன்று ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இதில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 5,000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. வேலை தேடுவோருக்கு இதை அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!