News April 23, 2025
நாமக்கல்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற விவசாயிகள் ஒவ்வொரு முறையும் நில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதை எளிதாக்க, தமிழ்நாடு அரசு வேளாண் அடுக்குத் திட்டத்தின் மூலம் அனைத்து விவரங்களையும் மின்னணுமயமாக்கி வருகிறது. எனவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் இ-சேவை மையங்களில் நில ஆவணங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News April 23, 2025
நாமக்கல்: :அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE!
News April 23, 2025
நில உடைமை விவரங்கள் பதிவு அவகாசம் நீட்டிப்பு!

2025-26 ஆம் ஆண்டிற்கான பிரதா மந்திரி கவுரவ நிதித்திட்ட PMKISAN இன் முதல் தவணை தொகை விடுவிக்கப்பட உள்ளன. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 116181 விவசாயிகளில் 85513 விவசாயிகள் மட்டும் நில உடைமை விவரங்கள் பதிவு செய்து இருப்பதால், மீதமுள்ள விவசாயிகள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு ஆட்சியர் உமா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
News April 22, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.19) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.6 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.80 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-22) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.