News October 24, 2024

நாமக்கல்  வராஹி அம்மன் கோயிலில் அஷ்டமி பூஜை

image

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள அருள்மிகு வராஹி அம்மன் திருக்கோயிலில் அஷ்டமி நாளான இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News

News January 25, 2026

நாமகிரிப்பேட்டை அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

நாமகிரிப்பேட்டை போலீசார் தொப்பப்பட்டி பகுதியில் நடத்திய ரோந்து பணியில், சட்டவிரோதமாக மது விற்ற ஜேடர்பாளையம் அழகேசன் மற்றும் பாபு ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 38 மதுபாட்டில்கள் மற்றும் 1,200 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2026

மோகனூர் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்

image

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே தகராறில் தனலட்சுமி என்ற பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். எஸ்பி விமலாவின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவின்படி சுரேஷ் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். படுகாயமடைந்த தனலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News January 25, 2026

கொல்லிமலை அருகே பள்ளி மாணவன் பலி

image

கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சி மேல்கலிங்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தம்பதி சிவப்பிரகாசம்-சரஸ்வதி. இவர்களது இளைய மகன் ஆகாஷ் (14) 9-ஆம் வகுப்பு மாணவன். இவன் மோட்டார் சைக்கிளில் தெம்பலம் கிராமம் நோக்கி சென்றபோது தனியார் பள்ளி வேன் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், சேலம் GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!