News March 26, 2024

நாமக்கல் ரூ.5 நாணயங்களாக செலுத்தி வேட்புமனு 

image

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் டெபாசிட் தொகை ர. 25 ஆயிரத்தை 5 ரூபாய் நாணயங்களாகக் கொண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தில் செலுத்தி, தனது வேட்பு மனுவை சுயேச்சை வேட்பாளராக இன்று 26.03.2024 தாக்கல் செய்தார். ரூ. 5 நாணயத்தை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சுமார் 1 மணி நேரம் எண்ணி கணக்கிட்டு அவருக்கு ரசீது வழங்கினார்கள்.

Similar News

News April 19, 2025

நாமக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

image

நாமக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையராக சிவக்குமார் இன்று 19ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார். ஏற்கனவே இருந்த ஆணையார் மகேஸ்வரி திருப்பூருக்கு இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆணையராக சிவக்குமார் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

News April 19, 2025

திமிங்கல எச்சம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது!

image

ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே பல கோடி மதிப்பிலான, 18 கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சம் விற்பனை செய்ய முயன்ற வெங்கடேசன், அப்துல் ஜலீல், ரவி ஆகிய 3 பேரை, ராசிபுரம் வனத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

News April 19, 2025

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிறப்புகள்!

image

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர் சுமார் 6 அடி உயரமுள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடதுபுறம் சேலையும் அணிவிக்கப்படுகிறது. இக்கோவில் உள்ள திருச்செங்கோடு மலை ஒருபுறம் பார்க்கும் போது ஆண் போலவும், மறுபுறம் பெண் போலவும் தோற்றம் அளிக்கிறது. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!