News November 22, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கல் வழியாக வண்டி எண்: 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் நாளை (நவ.23) ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55pm மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளது. இதில், பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன் படுத்திக்கொள்ளலாம்.

Similar News

News November 22, 2025

ராசிபுரம் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்!

image

ராசிபுரம் அருகே மெட்டாலா கும்பக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி. கடைக்கு சென்றவர் வீடு திரும்பாமல் போனதால், தாத்தா நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், வடுகம் நடுவீதியைச் சேர்ந்த விஷ்வா (19) ஆசைவார்த்தைகளால் மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மகளிர் போலீசார் மாணவியை பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தும், விஷ்வாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

News November 22, 2025

நாமக்கல் ஆட்சியருக்கு நீர் மேலாண்மைக்கான விருது!

image

இந்திய குடியரசு தலைவரின் தலைமையில் கடந்த (நவ.18) அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 6-வது தேசிய நீர் விருதுகள் மற்றும் ஜல் சஞ்சய் ஜன் பாகீரதி 1.0 விருது வழங்கும் விழாவில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி-க்கு “JSJB” முன்முயற்சியின் கீழ் 7057 நீர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதற்காக ரூபாய் 25 லட்சம் ரொக்க ஊக்கத்தொகை மற்றும் வகை 3-ல் JSJB 1.0 விருது வழங்கப்பட்டது.

News November 22, 2025

ராசிபுரம் அருகே பொது கழிவறையில் கேமரா!

image

ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரைச் சேர்ந்த நாகராஜ் (27) ஆண்டகலூர் கேட் டீக்கடையில் வேலை செய்தார். இந்நிலையில் நேற்று காம்ப்ளெக்ஸ் பொதுக் கழிப்பறையில் பெண்களை ஒளிவு மறைவாக வீடியோ எடுக்க தனது மொபைல் கேமரா ஆன் செய்த நிலையில் வைத்து விட்டார். கழிப்பறைக்கு வந்த பெண் அதை கண்டுபிடித்து புகார் செய்தார். விசாரணையில் குற்றம் உறுதியானதால், ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் நாகராஜை கைது செய்தனர்.

error: Content is protected !!