News October 26, 2025
நாமக்கல் ரயிலில் சிக்கி ஊழியா் பலி!

மோகனூா் குமரிபாளையத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜவேலு மகன் கவின் (21). மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் மோகனூா் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது சென்னையில் இருந்து போடிநாயக்கனூா் நோக்கிச் சென்ற ரயிலில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நாமக்கல் ரயில்வே போலீஸாா் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 26, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து நாளை (திங்கள்) அதிகாலை 4:20 மணிக்கு 07356 ராமேஸ்வரம் – ஹூப்ளி ரயிலில் ஓசூர், பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம்.
News October 26, 2025
நாமக்கல்:உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News October 26, 2025
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.101 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 525 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.110 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை


