News March 31, 2024
நாமக்கல்: முதலமைச்சரை சந்தித்த நாமக்கல் வேட்பாளர்

இன்று ஈரோட்டில் நாமக்கல் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணியின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றாா். இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன், நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News August 14, 2025
நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலில் பொது விருந்து

நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். இதன் தொடர்ச்சியாக அருள்மிகு நரசிம்ம சுவாமி கோவிலில் மதியம் 12.30 மணி அளவில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
News August 14, 2025
ஆயுள் பலம் தரும் நித்ய சுமங்கலி மாரியம்மன்!

நாமக்கல்: ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். திருமண தடை, தம்பதிக்கு இடையே பிரச்னைகள் நீங்க, வாழ்க்கை துணைவருக்கு ஆயுள் பலம் நீடிக்க, குடும்பத்துடன் ஒருமுறை நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசித்து வழிபட்டால், நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும், விரும்பியது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!
News August 14, 2025
நாமக்கல்: விவசாயிக்கு ரூ.2.5 லட்சம் பரிசு!

வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்புப் பயிர்களில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2,50,000, இரண்டாம் பரிசாக ரூ.1,50,000, மூன்றாம் பரிசாக ரூ.1,00,000 வழங்கப்படும் என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.