News February 12, 2026

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

Similar News

News February 14, 2026

நாமக்கல்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

image

நாமக்கல் மக்களே..அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே <>கிளிக்<<>> செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE பண்ணுங்க.

News February 14, 2026

எருமப்பட்டி அருகே சோகம்: 3 வயது குழந்தை பலி

image

எருமப்பட்டி அருகே திப்பரமாதேவி கிராமத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வன் – கவுதமி தம்பதியரின் மகள் தேவஸ்திரி (3), தாத்தா கந்தசாமியுடன் விவசாய நிலத்திற்குச் சென்றபோது, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். குழந்தையை மீட்டு நாமக்கல் GH கொண்டு சென்றும் பலனின்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 14, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தின் 8 தாலுகா அலுவலகங்களில் இன்று (பிப்.14) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம், மொபைல் எண் பதிவு மற்றும் புதிய கார்டு விண்ணப்பம் போன்ற சேவைகளைப் பெறலாம். பொதுமக்கள் தங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலக முகாமில் கலந்துகொண்டு ரேஷன் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். SHAREIT

error: Content is protected !!