News December 19, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
நாமக்கல்லில் உச்சம்! மாற்றமே இல்லை!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வு, மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த விலை உயர்வு எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த உச்சம் தொட்ட விலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News December 23, 2025
நாமக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை ஷேர் பண்ணுங்க!
News December 23, 2025
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (23-12-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.120-க்கும், முட்டை கோழி ரூ.95-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக விற்பனையாகி வருகின்றது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி கேக் தயாரிப்பதற்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.


