News October 24, 2024
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), இராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695), வேலூர் – கதியா பேகம் (8903881428) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
நாமக்கல்லில் முட்டை, கறிக்கோழி விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் 555 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தநிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், 5 காசுகள் உயர்த்தப்பட்டு 560 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல், நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.100-க்கும், முட்டைக் கோழி கிலோ ரூ.106-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
News November 8, 2025
நாமக்கல்: 10-வது படித்தால் அரசு வேலை.. நாளை கடைசி!

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நாளை நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இதை சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News November 8, 2025
நாமக்கல்: ரேஷன் கார்டு இருக்கா? இன்று மிஸ் பண்ணாதீங்க!

நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் இன்று (நவ.8) நடைபெறுகிறது. அனைத்து தாலுகாக்களில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் இருக்கும் வட்ட வழங்கல் பிரிவில் (காலை 10 – மதியம் 1 மணி வரை) நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், பெயர் திருத்தம், செல்போன் எண் பதிவு, புதிய குடும்ப அட்டை கோருதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஷேர் பண்ணுங்க!


