News November 4, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (03.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
நாமக்கல் மக்களுக்கு மின்வாரியம் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மின் கம்பங்கள் உடைந்து இருந்தாலோ அல்லது மின்கம்பிகள் ஏதேனும் அறுந்து கிடந்தாலோ அதன் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும். இது குறித்து உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நாமக்கல் மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். SHARE IT!
News November 4, 2025
நாமக்கல் அருகே அக்காவை கொன்ற தம்பி!

நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தங்காயி. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், தன்னுடைய தம்பி அழகேசனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், தங்காயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணை நடத்தி, அழகேசனை முதலில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ரூ.1 லட்சத்திற்காக அக்காவை கொன்றதாக அழகேசன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 3, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை !

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று ( நவம்பர் . 3) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை ( நவம்பர் . 4) முதல் முட்டையின் விலை ரூ.5.40 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


