News August 12, 2024
நாமக்கல் மாநகராட்சி ஆணையை பெற்ற மேயர்

நாமக்கல் மாநகராட்சியாக ஆனதை அடுத்து அதன் அரசு ஆணையை நாமக்கல் மேயர் கலாநிதி மற்றும் துணை மேயர் பூபதி மற்றும் நாமக்கல் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தமிழக அரசு வழங்கிய ஆணையை பெற்றுக் கொண்டனர். இதனால் நாமக்கல் நகராட்சி இன்று முதல் மாநகராட்சியாக மாறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாமக்கல் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாநகராட்சி உள்ள வார்டு உறுப்பினர்கள் கொண்டாடினர்.
Similar News
News November 15, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர்-15ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் 5 காசுகள் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.95 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ரூ.5.90 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
நாமக்கால ஆயுதப்படையில் வாராந்திர கவாத்து பயிற்சி!

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில், வாராந்திர கவாத்து இன்று நவம்பர்-15 காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விமலா கவாத்தை ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலிருந்தும் காவலர்கள் முதல், துணை காவல் கண்காணிப்பாளர் வரை ஆயுதப்படை மைதானத்தில் கவாத்தில் பங்கேற்றனர்.
News November 15, 2025
நாமக்கல்: Bank of India வங்கியில் வேலை!

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை (BOI)!
மொத்த பணியிடங்கள்: 115
கல்வித் தகுதி: BE/B.Tech, M.sc, MCA
சம்பளம்: ரூ.64820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: 17.11.2025.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:<


