News March 24, 2024
நாமக்கல்: மருத்துவ முகாமில் பொது மக்கள் பங்கேற்பு

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சித்திரம் பவுண்டேஷன் வாசன் ஐ கேர் மணிபால் ஹாஸ்பிடல் சார்பாக இலவச பொது மருத்துவம் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து ஆலோசனை பெற்று சென்றனர். இந்நிகழ்வில் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் ராஜேஷ் கார்த்திகேயன்,பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 3, 2026
ப.வேலூர் அருகே சோகம்: வாலிபர் பலி!

கபிலர்மலை கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் (21). நண்பர்களுடன் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அனைவரும் குளித்துவிட்டு வெளியே வந்த நிலையில், மாணிக்கராஜ் மட்டும் வராததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர் ஒரு மணி நேரம் போராடி அவரது சடலத்தை மீட்டனர். இதுகுறித்து ப.வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 3, 2026
பள்ளிப்பாளையம் அருகே விபத்து: பெண் பலி

பள்ளிப்பாளையம் அருகே ஐந்துபனை பகுதியைச் சேர்ந்த விசாலாட்சி (59) என்ற கூலித்தொழிலாளி, நேற்று முன்தினம் இரவு சாலையில் நடந்து சென்றபோது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 3, 2026
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

நீர்நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனை மரங்கள் கைவினைப்பொருட்கள் தயாரிக்கவும், உணவுப்பொருட்களை தரக்கூடியதாகவும், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள் தன்மைக்கு உதவக் கூடியதாகவும், மண் வளம் மற்றும் நீர் சேமிப்பை அதிகரிக்கவும் உதவுகிறது எனவே பனை மரத்தை வெட்ட வேண்டுமானால் நாமக்கல் நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.


