News October 2, 2025
நாமக்கல்: பேருந்தில் ஒழுங்கற்ற நடத்தையா? கவலை வேண்டாம்!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம், சேலம் கோட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில், தினமும் பல ஆயிரம் பேர், பயணம் செய்கின்றனர். பயணம் செய்யும்போது, சேவை குறைபாடு ஏற்பட்டாலோ, ஓட்டுனர், நடத்துனர் ஆகியோர், பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டாலோ, இதுகுறித்து, 1800 599 1500, 94892 – 03900 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். SHARE பண்ணுங்க மக்களே!
Similar News
News October 3, 2025
நாமக்கல்லில் பரபரப்பு கைது: போலீஸ் அதிரடி

எருமப்பட்டி கைகாட்டியை சேர்ந்தவர் முகம்மது அப்துல் ரகுமான், 25. இவர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ள நிலையில் நாமக்கல் எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., தனராசு ஆகியோர் முகம்மது அப்துல் ரகுமானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி, நாமக்கல் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில் ஆட்சியர் உத்தரவின் படி போலீசார் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
News October 3, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 2, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (அக்.02) நாமக்கல்-(தேசிங்கன் – 8668105073) ,வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி-9498169110), குமாரபாளையம் – (செல்வராஜு – 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.