News September 18, 2025
நாமக்கல்: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? ஈஸி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 4, 2025
முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.2 சரிவு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.106 ஆக சரிவடைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாகவும், கறிக்கோழி கிலோ ரூ.106 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
News November 4, 2025
நாமக்கல்: கரண்ட் பில் அதிகமா வருதா?

நாமக்கல் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 4, 2025
நாமக்கல் மக்களுக்கு மின்வாரியம் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மின் கம்பங்கள் உடைந்து இருந்தாலோ அல்லது மின்கம்பிகள் ஏதேனும் அறுந்து கிடந்தாலோ அதன் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும். இது குறித்து உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நாமக்கல் மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். SHARE IT!


