News January 3, 2026
நாமக்கல்: தொடர்ந்து உச்சத்தில் நீடிக்கும் விலை

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளை கூட்டம் நேற்று (ஜனவரி 2) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.6.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், இன்று (ஜனவரி 3) முதல் முட்டையின் விலை ரூ.6.40 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Similar News
News January 31, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்க்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 82 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 355 முகவர்கள் மூலம் விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1-ஆம் தேதி முதல், முகவர்கள் தங்களுக்குத் தேவையான பால் மற்றும் உபபொருட்களைப் புதிய ஆவின் செயலி (Aavin App) மூலமாகவே முன்பதிவு செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
News January 31, 2026
நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

நாமக்கல் மாவட்டத்தில், வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி (01.02.2026) அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிம வளாகங்கள் அன்றைய தினம் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 31, 2026
நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

நாமக்கல் மாவட்டத்தில், வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி (01.02.2026) அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிம வளாகங்கள் அன்றைய தினம் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


