News November 20, 2025
நாமக்கல்: தண்ணீர் என நினைத்து குடித்து இளம்பெண் சாவு

நாமக்கல் திண்டமங்கலத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (23), கணவர் மோகன்ராஜ் மற்றும் 3 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். திண்டமங்கலத்தில் நிகழ்ச்சிக்கு வந்தபோது, வயலில் பயன்படுத்த வைத்திருந்த விஷ மருந்து கலந்த தண்ணீரை குடிநீர் என தவறாக குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
ராசிபுரம் அருகே பெண் விபரீத முடிவு

ராசிபுரம் அருகே சப்பையாபுரம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா்(24).இவரது மனைவி காயத்ரி(20). இவா்களுக்கு ஒருமாத ஆண் குழந்தை உள்ள நிலையில், ஆனந்தகுமாா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்துவந்துள்ளாா். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த காயத்ரி கடந்த 19-ஆம் தேதி விஷமருந்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News November 22, 2025
நாமக்கல்: டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பீதி!

பரமத்திவேலூர் உட்கோட்டப் பகுதிகளில் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் தெரிவித்தனர். கரூர்–அரவக்குறிச்சி பகுதிகளில் நால்வருக்கும் மேற்பட்டவர் முகம் மறைத்து, ஆயுதங்களுடன் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய சம்பவங்களையடுத்து, சந்தேக நபர்கள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தர கேட்டுக் கொண்டுள்ளனர்.
News November 22, 2025
நாமக்கல்: டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பீதி!

பரமத்திவேலூர் உட்கோட்டப் பகுதிகளில் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் தெரிவித்தனர். கரூர்–அரவக்குறிச்சி பகுதிகளில் நால்வருக்கும் மேற்பட்டவர் முகம் மறைத்து, ஆயுதங்களுடன் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய சம்பவங்களையடுத்து, சந்தேக நபர்கள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தர கேட்டுக் கொண்டுள்ளனர்.


