News October 22, 2025

நாமக்கல் காவல்துறையின் எச்சரிக்கை!

image

மழைக்காலம் என்பதால் குழந்தைகளை ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளில் குளிக்க விடாமல் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மழை காரணமாக நீர்நிலைகளின் ஆழம், நீரோட்டம் அதிகரித்துள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம். பாதுகாப்பே முதன்மை என மக்கள் நலனுக்காக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News October 22, 2025

நாமக்கல்: அரசு வங்கியில் சூப்பர் வேலை! APPLY NOW

image

நாமக்கல் பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா…? உங்கள் வங்கிப் பணிக் கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. அரசு வங்கியின் UCO வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி நாள். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க! இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 22, 2025

நாமக்கல் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து நாளை(அக்.23) காலை 11:32 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லவும் இரவு 9:15 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், காயங்குளம், செங்கனூர், செங்கணசேரி, கோட்டயம் போன்ற பகுதிகளுக்கு செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News October 22, 2025

நாமக்கல்லில் ரூ.15.06 கோடிக்கு மது விற்பனை!

image

நாமக்கல் மாவட்டத்தில் இந்த தீபாவளியை ஒட்டி இரண்டு நாட்களில் ரூ.15.06 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளின் தீபாவளி விற்பனையை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி மதுபான விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.

error: Content is protected !!