News September 1, 2024

நாமக்கல்: கந்துவட்டி தற்கொலை வழக்கில் பெண் கைது

image

பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுஜாதா. இவர் அதே பகுதியை சேர்ந்த கவிதா என்பவரிடம் ரூ.30,000 கந்து வட்டிக்கு கடன் பெற்றார். கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கவிதா ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த சுஜாதா கடந்த 21ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கவிதா நேற்று திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

Similar News

News August 29, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட். 28 ) நாமக்கல் – கோமதி (9498167680 ), ராசிபுரம் – அம்பிகா ( 9498106528), திருச்செங்கோடு – சங்கீதா ( 9498167212), வேலூர் – இந்திராணி ( 9498169033) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News August 28, 2025

நாமக்கல்லில் 89.96°F வெப்பம் பதிவு!

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் இன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலையாக 89.96° ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும், வேலைக்கு செல்வோரும் அவதியடைந்துள்ளனர்.

News August 28, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, ஒரு முட்டையின் விலை ரூ. 5.10 என நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று முட்டையின் விலை ரூ.5.05 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!