News October 22, 2025
நாமக்கல்: எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில், எஸ்.பி. விமலா தலைமையில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News October 22, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்-22 நாமக்கல்-(தேசிங்கன் – 8668105073), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (சின்னப்பன்- 9498169092), குமாரபாளையம் – (செல்வராஜு – 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 22, 2025
நாமக்கல் முட்டை விலையில் மாற்றம் இல்லை

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்.22) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்.23) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News October 22, 2025
எம்.பி ராஜேஷ்குமார் நாளை நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிரல்!

மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான ராஜேஸ்குமார் நாளை (அக்.23) கலந்துகொள்ளும் நிகழ்ச்சி விவரம்: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் உள்ள முருங்கப்பட்டி, நடுப்பட்டி, அலவாய்ப்பட்டி, பல்லவநாயக்கன்பட்டி, வருதராஜபுரம் ஆகிய ஒன்றியங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இறுதியாக மாலை 6 மணி அளவில் நாமக்கல்லில் பார்வையாளர்களை சந்திக்கிறார்.