News August 15, 2025

நாமக்கல்: உதவியாளர் வேலை.. ரூ.76,000 சம்பளம்!

image

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 75 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.10,900 முதல் ரூ.76,380 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

Similar News

News August 15, 2025

நாமக்கல் எஸ்பி-க்கு விருது: எம்.பி வாழ்த்து

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறையின் 24 அலுவலர்களுக்கு இந்திய குடியரசு தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சத்தக்க பணிக்கான விருது பட்டியலில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா சிறந்தசேவையை, பாராட்டி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

News August 15, 2025

சுதந்திர தின காவல் அணிவகுப்பு மரியாதை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பங்கேற்று மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமாதானத்தை வலியுறுத்தும், விதமாக வெள்ளை புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் இன்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.

News August 15, 2025

நாமக்கல்: அரசு ஐ.டி.ஐ -யில் நேரடிச் சேர்க்கை பெற அவகாசம் நீடிப்பு

image

நாமக்கல் அரசு ஐ.டி.ஐ -யில் நேரடிச் சேர்க்கை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். எனவே அரசு ஐ.டி.ஐ -யில் நேரடி சேர்க்கை பெற 31-08-2025 வரையிலும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!