News December 10, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
பள்ளிபாளையம் அருகே வசமாக சிக்கிய இளைஞர்: அதிரடி கைது

பள்ளிபாளையம் அடுத்துள்ள வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன். ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று விசேஷத்திற்காக பாண்டிச்சேரி குடும்பத்துடன் சென்ற நிலையில், இவரிடம் பணிபுரியும் கதிர் என்ற இளைஞர் வீட்டில் வைத்திருந்த 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் குமரன் அளித்த புகார் அடிப்படையில் கதிரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர்.
News December 10, 2025
பள்ளிபாளையம் அருகே வசமாக சிக்கிய இளைஞர்: அதிரடி கைது

பள்ளிபாளையம் அடுத்துள்ள வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன். ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று விசேஷத்திற்காக பாண்டிச்சேரி குடும்பத்துடன் சென்ற நிலையில், இவரிடம் பணிபுரியும் கதிர் என்ற இளைஞர் வீட்டில் வைத்திருந்த 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் குமரன் அளித்த புகார் அடிப்படையில் கதிரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர்.
News December 10, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல்லில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் BC, MBC பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியர் வரும் டிச.31ந் தேதி வரை பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


