News September 3, 2025

நாமக்கல்: இனி அலைய வேண்டாம்.. ஒரு மெசேஜ் போதும்!

image

நாமக்கல் மக்களே, கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். SHARE IT!

Similar News

News September 5, 2025

இராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

image

இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவன் பி.கோபிபிரசாந்த், புது டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம், அந்தமானில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். மேலும், அதே கல்லூரியை சேர்ந்த மாணவன் எஸ்.ஹரி, தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் 2 மற்றும் 3ஆம் இடங்களை பிடித்து கோப்பைகளை வென்றுள்ளார்.

News September 5, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து வரும் வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் .

News September 5, 2025

காவல்துறையில் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்டம்பர் (04/09/25) நாமக்கல்-( ராஜமோகன்: 9442256423 ) ,வேலூர் -( ரவி :9498168482 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி :9498169110), திம்மநாயக்கன்பட்டி -( ரவி: 9498168665 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!