News November 6, 2025
நாமக்கல்: இதை செய்தால் பணம் போகும்!

நாமக்கல் மக்களே, கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. அதாவது, WhatsApp, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி E-Challan மெசேஜ்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தைகயை எஸ்எம்எஸ்-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே, உஷாராக இருங்க மக்களே! இதை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 6, 2025
முட்டை விலை ரூ. 5.50- ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி மற்றும் முட்டைக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை
News November 6, 2025
அத்தனூரில் செடிகள் தயார்: இலவச விநியோகம்

அத்தனூரில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டத்தின் கீழ், தேக்கு, மகாகனி, செம்மரம், வேம்பு, சந்தனம் உள்ளிட்ட பல இனச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவு செய்ய தயார் நிலையில் உள்ளன. ஆர்வம் உள்ள விவசாயிகள் வனத்துறையினரை தொடர்பு கொண்டு இந்தச் செடிகளை இலவசமாக பெற்று நடவு செய்துகொள்ளலாம்.
News November 6, 2025
நாமக்கல்: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி! APPLY NOW

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்துடன், உரிய கல்விச்சான்று மற்றும் அனுபவச் சான்றுகளை இணைத்து நவ.17-ம் தேதிக்குள், மாவட்ட முகமை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய கூடம், அம்மா பூங்கா எதிரில், வகுரம்பட்டி (அஞ்சல்), நாமக்கல் மாவட்டம்-637002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


