News October 28, 2025
நாமக்கல்: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (SHARE பண்ணுங்க)
Similar News
News October 28, 2025
நாமக்கல்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News October 28, 2025
நாமக்கல்லில் வசமாக சிக்கிய இளைஞர்!

நாமக்கல், தூசூரை சேர்ந்தவர் காமாட்சி (75). இவர் கடந்த பிப்ரவரி 16ம் தேதி வீட்டில் இருந்து போது அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர், காமாட்சியின் வாயை பொத்தி, அவர் அணிந்து இருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்து கொண்டு தலைமறைவானர். இதுகுறித்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட நாமக்கல் போலீசார் கணவாய்பட்டியை சேர்ந்த பரத் மனோ (26) என்ற இளைஞரை 8 மாதங்களுக்கு பிறகு நேற்று கைது செய்தனர்.
News October 28, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.5.35 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.30 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.


