News April 25, 2025
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சிறப்புகள்!

தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அனுமன் கோயிலென்றால், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் தான். இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை, இந்தியாவில் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலைகளில் ஒன்றாக, 18 அடி உயரத்தில் ஒரே கல்லில் குடையப்பட்டதாகும். இந்த சிலை 5-ம் நூற்றாண்டில் குடையப்பட்டது என நம்பப்படுகிறது. இந்த ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். SHARE IT
Similar News
News April 25, 2025
முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (25-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.05 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 22) முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.05 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
News April 25, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.8 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
News April 25, 2025
நாமக்கல்: புகாரளிக்க செயலி (App) அறிமுகம்!

நாமக்கல்: சட்டவிரோத போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து, தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DRUG FREE TAMILNADU என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல், புகார் அளிக்கலாம். Referral ID பயன்படுத்தி புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. SHARE பண்ணுங்க!