News August 10, 2024

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம்

image

உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று 11 மணியளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டது. துளசியால் அர்ச்சனை செய்த பின் மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர். வீட்டிலிருந்தே அனைவருக்கும் பகிருங்கள்.

Similar News

News October 23, 2025

நாமக்கல்லில் இப்ப்படியும் மோசடி!உஷார்

image

நாமக்கல் மக்களே சமீப காலமாக, அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகள் மற்றும் ஆன்லைன் செய்திகளால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக குறுகிய காலத்திலேயே பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி, இந்த மோசடி கும்பல் பொதுமக்களை குறிவைக்கிறது. எனவே, இது போன்ற ஏமாற்று அழைப்புகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News October 23, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

நாமக்கல்லில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி!

image

நாமக்கல் அரசு ஆண்கள் (தெற்கு) மேல்நிலை பள்ளியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி வரும் அக்.30ந் தேதி காலை 09.30 மணி முதல் 1 மணி வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு அரசு/தனியார் பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 01.30 மணி முதல் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்படவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பெறும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!