News April 25, 2024

நாமக்கல் அருகே விபரீத முடிவு

image

எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (45). ஓட்டல் நடத்தி வந்தார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்,ரவி அதிகளவில் கடன் வாங்கி, ஓட்டலை நடத்தி வந்துள்ளார்.கடனை திரும்ப கட்ட முடியாமல், சிரமப்பட்டு வந்துள்ளார்.மனவேதனையடைந்த ரவி,நேற்று முன்தினம் இரவு, தற்கொலை செய்து கொண்டார்.நேற்று காலை, அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். நேற்று எருமப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.

Similar News

News May 8, 2025

நாமக்கல் மாணவி அசத்தல்!

image

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.8) வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி கார்த்திகா, 598/600 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், பள்ளி ஆசிரியர்களும் மாணவிக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

News May 8, 2025

மார்கழியில் மட்டுமே காட்சி தரும் மரகத லிங்கம்!

image

நாமக்கல்: திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு மார்கழி மாதம் மட்டும் மரகத லிங்கம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இந்த மரகத லிங்கத்தை தரிசனம் செய்ய காலை 5 மணிக்குள் கோவிலில் இருக்க வேண்டும். SHARE பண்ணுங்க!

News May 8, 2025

நாமக்கல்: 70 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 195 பள்ளிகள் உள்ளது. அதில் 12 அரசு பள்ளிகள் உட்பட 70 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 9343 பேரில் 8672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!