News April 25, 2024

நாமக்கல் அருகே விபரீத முடிவு

image

எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (45). ஓட்டல் நடத்தி வந்தார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்,ரவி அதிகளவில் கடன் வாங்கி, ஓட்டலை நடத்தி வந்துள்ளார்.கடனை திரும்ப கட்ட முடியாமல், சிரமப்பட்டு வந்துள்ளார்.மனவேதனையடைந்த ரவி,நேற்று முன்தினம் இரவு, தற்கொலை செய்து கொண்டார்.நேற்று காலை, அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். நேற்று எருமப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.

Similar News

News October 27, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (27.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட அதிகாரியை அல்லது 100-ஐ டயல் செய்து அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

விவாகரத்து: நீதிமன்றத்தை கண்டித்து தர்ணா!

image

திருச்செங்கோடு வட்டம் சங்ககிரி ரோட்டில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் முன்பு, எலச்சிபாளையம் சின்ன மணலியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், திருச்செங்கோடு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு அளித்தும், இதுவரை விவாகரத்து தராததாக கூறி, நீதிமன்றத்தை கண்டித்து இன்று அக்டோபர் 27 காலை 10:40 மணிக்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

News October 27, 2025

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, வருகின்ற நவம்பர் 1 அன்று காலை 11.30 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அந்தந்த கிராம ஊராட்சிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி பயனடையலாம், மேலும் வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!