News November 3, 2025
நாமக்கல் அருகே வாலிபர் பலி!

சேலம், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (30). இவர் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பிலிப்பாக்குட்டை பகுதியை சேர்ந்தவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்துவந்தார். இந்த நிலையில் தோட்டத்தில் மருந்து அடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்ற சரவணன் தவறி கிணற்றில் விழுந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சரவணன் உடலை மீட்டனர். ஆயில்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
Similar News
News November 3, 2025
நாமக்கல்: குடமுழுக்கு விழா.. இஸ்லாமியா்கள் சீா்வரிசை!

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கொக்கராயன்பேட்டை சுயம்பு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக, அல்முகமதியா ஜாமியா மஸ்ஜித் நிா்வாகம் மற்றும் சுன்னத் ஜமாத்தாா்கள் சாா்பில் நேற்று கோயிலுக்கு சீா்வரிசை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
News November 3, 2025
நாமக்கல்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!
News November 3, 2025
நாமக்கல்: B.E / B.Tech படித்திருந்தால் ரூ.40,000 சம்பளம்!

நாமக்கல் மக்களே, மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / B.Tech படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <


