News January 5, 2026
நாமக்கல் அருகே இளம்பெண் சடலமாக மீட்பு

பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தீபா, 37; விவசாயி. இவரது மகள் சர்மிளா, 18. திருச்சி தனியார் கல்லுாரியில், 1ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை அருகில் இருக்கும் அத்தை வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் சர்மிளா சடலமாக மீட்கப்பட்டார். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
நாமக்கல்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE IT!
News February 5, 2026
நாமக்கல் : VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாமக்கல் மாவட்ட மக்கள் 04286281331 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 5, 2026
நாமக்கல்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


