News November 4, 2025

நாமக்கல் அருகே அக்காவை கொன்ற தம்பி!

image

நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தங்காயி. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், தன்னுடைய தம்பி அழகேசனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், தங்காயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணை நடத்தி, அழகேசனை முதலில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ரூ.1 லட்சத்திற்காக அக்காவை கொன்றதாக அழகேசன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 4, 2025

நாமக்கல்: இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் ஆகியோர் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றவர்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்படுகிறது. வருகிற நவ.25ஆம் தேதிக்குள் உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News November 4, 2025

நாமக்கல்: ரேஷன் கடையில் கைரேகை பதியவில்லையா?

image

நாமக்கல் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக் <<>>செய்து Grievance Redressal, நாமக்கல் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7-10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். SHARE IT

News November 4, 2025

நாமக்கல்: கொட்டிக் கிடக்கும் வேலைகள் APPLY NOW

image

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
இதை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!