News November 1, 2024
நாமக்கல்: அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்

என்சிசி மாணவர்களுக்கான ஆண்டு பயிற்சி முகாம், ஈரோடு 15வது பட்டாலியனின் கமாண்டிங் அலுவலர் கர்னல் அஜய் குட்டினோ தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 360 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முகாமில் பல்வேறு திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி 18 மாணவர்கள் கலந்து கொண்டனர். துப்பாக்கி சுடுதலில் 8 மாணவர்கள் தங்க பதக்கம் வென்றனர்.
Similar News
News May 8, 2025
நாமக்கல் மாணவி அசத்தல்!

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.8) வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி கார்த்திகா, 598/600 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், பள்ளி ஆசிரியர்களும் மாணவிக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
News May 8, 2025
மார்கழியில் மட்டுமே காட்சி தரும் மரகத லிங்கம்!

நாமக்கல்: திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு மார்கழி மாதம் மட்டும் மரகத லிங்கம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இந்த மரகத லிங்கத்தை தரிசனம் செய்ய காலை 5 மணிக்குள் கோவிலில் இருக்க வேண்டும். SHARE பண்ணுங்க!
News May 8, 2025
நாமக்கல்: 70 பள்ளிகள் 100% தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 195 பள்ளிகள் உள்ளது. அதில் 12 அரசு பள்ளிகள் உட்பட 70 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 9343 பேரில் 8672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)