News January 25, 2025
நாமக்கல்லில் 64 பேருக்கு லாக்கப்: எஸ்பி அதிரடி

நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடிக்க நாமக்கல் எஸ்பி ராஜேஸ்கண்ணன் உத்தரவிட்டிருந்தார். ஒரு வாரமாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய வழக்குகளில் தொடர்புடைய, 64 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News August 30, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.30 ) நாமக்கல் – வேதபிறவி (9498167158 ), ராசிபுரம் – சுகவனம் ( 9498174815), திருச்செங்கோடு – சாஸ்தா இந்துசேகரன் ( 8300019722), வேலூர் – பழனி ( 9498110873) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 30, 2025
கடன் தீர்க்கும் அணியாபுரம் காலபைரவர்!

நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை, கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 30, 2025
தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத சனிக்கிழமையையொட்டி இன்று காலை 10:30 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்குப் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.