News August 15, 2025
நாமக்கல்லில் முட்டை விலை மாற்றம் இல்லை

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) கூட்டம் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், ஒரு முட்டையின் விலை தொடர்ந்து ரூ.4.90 ஆகவே நீடிக்கிறது.
Similar News
News March 4, 2026
நாமக்கல் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

நாமக்கல், வேலகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தப்பியோட முயன்ற பொம்மம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (21) என்பவரைப் பிடித்த போலீசார், அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தினேஷைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 4, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட நான்கு மையங்களில் தெருநாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும். உள்ளாட்சிப் பணியாளர்கள் மூலம் பிடிக்கப்படும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஐந்து நாள் கண்காணிப்பிற்குப் பின் மீண்டும் அதே இடங்களில் விடப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர். துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (03.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


