News December 30, 2025
நாமக்கல்லில் பாட்டிலுக்கு 10 ரூபாய்: கடும் எதிர்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 186 டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. இதில் 744 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். நாமக்கல் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து டாஸ்மாக் 24 கடைகளிலும் காலி மதுப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
Similar News
News January 5, 2026
நாமக்கல்லில் டன் கணக்கில் கடத்தல்: போலீஸ் அதிரடி

நாமக்கல் மாவட்டத்தில் 2025ல் ரேஷன் அரிசி கடத்தியது பதுக்கி விற்பனை செய்தது என 364 வழக்கு பதிந்து சம்பந்தப் வழக்குகளில் 364 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 140 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 122 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும், அபராதம் மூலம் ரூ.18 லட்சத்து 72100 வசூல் செய்யப்பட்டுள்ளது என குடிமை பொருள் குற்றப்புலனாய்புத்துறை தெரிவித்துள்ளது.
News January 5, 2026
பரமத்திவேலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

திருவண்ணாமலையை சேர்ந்தவர் கன்னியப்பன் (24). இவர் ஜமன்இளம்பள்ளியில் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் இரவு சாலையோரம் நடந்து சென்ற போது சோழசிராமணி நோக்கி சென்ற வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு திருச்செங்கோடு GHக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
News January 5, 2026
நாமக்கல்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


