News May 7, 2025
நாமக்கல்லில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட கோயில்

பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் இங்கு தங்கி இருந்து பெருமாளை தரிசித்ததால் இவ்வூர் பாண்டவர் மங்கலம் என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி பாண்டமங்கலம் ஆனது. இங்கு தை மாதத்தில் கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா துவங்கப்பட்டு 7 நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். புரட்டாசி மாதம் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. SHARE IT!
Similar News
News July 6, 2025
நாமக்கல்லில் இன்றைய கறிக்கோழி விலை

நாமக்கல்லில் தினமும் நடைபெறும் பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி மற்றும் முட்டைக்கோழி விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில், முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.106 ஆகவும், கறிக்கோழி ஒரு கிலோ ரூ.97 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
News July 6, 2025
நாமக்கல் : போலி ஆர்.டி.ஓ பெண்ணுக்கு போலீஸ் கஸ்டடி

திருச்செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தநவீன்குமார்(29) என்பவரை தன்வர்த்தினி கோட்டாட்சியர் என ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக தன்வர்த்தினியை ஜூன்.26ல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போலி அடையாள அட்டை, அரசு நியமன உத்தரவு ஆகியவற்றை தயாரித்து மோசடி செய்தது அம்பலமானது. இது போல் வேறு மோசடியில் ஈடுபட்டாரா என விசாரிக்க அவரை போலீஸ் கஸ்டடி எடுக்க முடிவு செய்யப்ட்டுள்ளது.
News July 6, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 5 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல் பாலசுப்ரமணியம் ( 944 2851418) வேலூர்- சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம்- பாலசுப்ரமணியம் ( 9498168505), திருச்செங்கோடு வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073) , குமாரபாளையம் – மணிகண்டன் ( 9498168984), ஆகியோர் இரவு இரவு வாகன ரோந்து பணியில் உள்ளனர்.