News December 16, 2025

நாமக்கல்லில் ஜல்லிக்கட்டு போட்டி!

image

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை தொடா்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். குமாரபாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்றுவட்டாரங்களில் இளைஞா்கள் தாங்கள் வளா்க்கும் காளைகளை தயாா் செய்து வருகின்றனா். குறிப்பாக, கிணறு, ஏரிகளில் நீச்சல் பயிற்சி அளிப்பது, மண்ணைக் குத்தி மிரட்டல் பாா்வை விடுப்பது, தலையை சுழற்றுவது, வீரா்களை நெருங்கவிடாமல் செய்வது போன்ற உத்திகளை பழக்கி வருகின்றனர்.

Similar News

News December 19, 2025

திருச்செங்கோட்டில் லாரி மோதி விவசாயி பலி

image

திருச்செங்கோடு கூனாண்டிகாடு பகுதியை சேர்ந்த விவசாயி மாரப்பன் (70), நேற்று முன்தினம் கடைக்கு செல்ல தனது மொபட்டில் திருச்செங்கோடு மலை சுற்றுப்பாதையில் சென்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து வந்த லாரி மொபட் மீது மோதியது. படுகாயம் அடைந்த மாரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவரான நாமக்கல்லை சேர்ந்த காதரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 19, 2025

நாமக்கல்: விசைத்தறிகளை நவீனமாக்க மானியம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமாக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்படி திட்டத்தில் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட அல்லது புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திட அல்லது பொது சேவை மையம் நிறுவிட விருப்பமுள்ள நபர்கள் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

News December 19, 2025

நாமகிரிபேட்டை அருகே வாலிபர் மர்மசாவு!

image

நாமகிரிபேட்டை, ஈஸ்வரமூர்த்திபாளைத்தில் முத்துலிங்கம் என்பவர் தனது தோட்டத்தின் அருகே செல்போன் கோபுரம் அருகில் நேற்று முன்தினம் 30 வயது ஒருவர் இறந்த நிலையில் இருந்ததை போலீசாருக்கு தெரிவித்தார். விசாரணையில் இறந்தவர் ஈஸ்வரமூர்த்திபாளையம் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என உறுதி செய்யப்பட்டது. மர்மமான முறையில் இறந்த நிகழ்வின் காரணம் குறித்து மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!