News December 11, 2025
நாமக்கல்லில் கோர விபத்து; ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் காவல்நிலையம் அருகே டிசம்பர் 10 அன்று இரவு 10 மணியளவில், சாலையின் ஓரமாக நின்ற லாரியின் பின்புறம் ஒரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் நல்லூர் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். உடன் வந்த மற்றொருவருக்கு முகம் மற்றும் கை–கால்களில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்துக்குறித்து எலச்சிப்பாளையம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Similar News
News March 4, 2026
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (04-03-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.128- ஆகவும், பண்ணை கோழி விலை ரூ.62- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ.4.30- ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றது. கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை மளமளவென சரிவடைந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
News March 4, 2026
நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News March 4, 2026
நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதியில் கடும் பாதிப்பு !

நாமக்கல்லிலிருந்து வளைகுடா நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி போர்காரணமாக, முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கப்பலில் 77 கன்டெய்னர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட ரூ. 14 கோடி மதிப்பிலான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், நாமக்கல்லில் முட்டை விலை குறைவுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.


