News October 17, 2025
நாமக்கல்லில் குற்றக் கலந்தாய்வுக் கூட்டம்!

நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (17.10.2025) மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.விமலா, இ.கா.ப., தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள குற்றச் சம்பவங்களைத் தடுப்பது மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
Similar News
News October 17, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.17 நாமக்கல்-(தங்கராஜ் – 9498110895), வேலூர் – (சுகுமாரன் -8754002021), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (செல்வராசு -9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 17, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்டோபர்.17) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 18) முதல் முட்டையின் விலை ரூ.5.20 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News October 17, 2025
நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (17.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.