News March 22, 2025

நாமக்கல்லில் இளம்பெண் விபரீத முடிவு

image

திருச்செங்கோடு அருகே சிறுமொளசியில் வசித்து வருபவர் முனுசாமி. இவருடைய இளைய மகள் செல்வி (17). கடந்த 2 ஆண்டுகளாக செல்வி வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்தார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றும் குணமடையவில்லை. இதனால் செல்வி மனவேதனையில் இருந்து வந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 21, 2025

இளைஞர்களுக்கு 30% மானியம் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்களுக்கு 30% மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சுயதொழில் துவங்க மானியம் வழங்கப்படுகிறது. மேலும், https://www.thagrisnet.tn.gov.in/KaviaDP/register இணையதள முகவரியில் உரிய விண்ணப்பிக்கலாம். இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News September 21, 2025

நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் மேசன் பார்பென்டர் எலக்ட்ரீசியன் கார்பென்டர் பிளம்பர் வெல்டர் கொல்லர் கண்ணாடி வேலை ஏ.சி.மெக்கானிக் பெயிண்டர் டைல் லேயர் ஆகிய தொழில்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் 04286-280220 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் துர்காமுர்த்தி கூறியுள்ளார்.

News September 21, 2025

நாமக்கல்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க! யாருக்காவது உதவும்!

error: Content is protected !!